மத்திய அரசின் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையின் கீழ் பிளஸ் 1 பயிலும் சிறுபான்மை இனமாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. இதை பெற 10ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று, தற்போது பிளஸ் 1ல் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும், 20 ரூபாய் நீதிமன்ற சாரா முத்திரை தாளில் உறுதி ஆவணம் விண்ணப்பித்து, பயிலும் கல்வி நிலையத்தில் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை இணைய தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இவற்றை கல்வி நிலைய தலைமை ஆசிரியர், "தி செக்ரட்டரி, மவுலானா ஆசாத் எஜூகேஷன் பவுன்டேஷன், சிலம்ஸ் ரோடு, நியு டில்லி' என்ற முகவரிக்கு ஆக.31க்குள் அங்கு சென்று சேரும் வகையில் வைக்க வேண்டும்.
-தினமலர்-


